பொற்கோவில் அருகே 24 மணி நேரத்தில் இரண்டு மர்ம பொருட்கள் வெடித்ததால் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


பொற்கோவில் அருகே 24 மணி நேரத்தில் இரண்டு மர்ம பொருட்கள் வெடித்ததால் பரபரப்பு.!

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிர்தசரஸ் பகுதியில் சீக்கியர்களின் புனித தலமான பொற்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் அருகே நேற்று மர்ம பொருள் வெடித்துள்ளது. இந்த விபத்தில் அங்குள்ள ஒரு கட்டிடத்தின் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தது. 

இதனால், பொதுமக்கள் அனைவரும் பீதியில் இருந்துள்ளனர். இந்நிலையில் இன்று காலை 6.30 மணி அளவில் அதேபகுதியில் மீண்டும் மர்மபொருள் ஒன்று பயங்கரமான சத்தத்துடன் வெடித்தது. 

இந்த சத்தம் கேட்டு பொதுமக்கள் அனைவரும் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியதில், வெடித்த மர்மபொருள் என்னவென்று தெரியவில்லை. 

இதனால், தடயவியல் நிபுணர்கள் அதன் மாதிரியை சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த வெடி சம்பவத்தில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 24 மணி நேரத்தில் ஒரே இடத்தில அடுத்தடுத்து நடைபெற்ற இந்த சம்பவம் அமிர்தசரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

mysterious objects explosion in near golden temple amitasaras


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->