மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜை கொண்டாடியவர்கள் மீது இஸ்லாமியர்கள் தாக்குதல்.! - Seithipunal
Seithipunal


மேற்குவங்க மாநிலம் மோமின்பூர் பகுதியில் நேற்று இரு சமூகத்தினர் இடையே பதற்றம் ஏற்பட்டதையடுத்து வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் காவல்துறை தெரிவித்த தகவலின் படி, இஸ்லாமியர்கள் மிலாது நபிக்காக சனிக்கிழமை இரவு  வைக்கப்பட்ட மத கொடிகளை சேதப்படுத்தியால்  வன்முறை வெடித்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து நேற்று  கொல்கத்தாவின் புறநகர் பகுதியான மொமின்பூரில் லட்சுமி பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் இஸ்லாமியர்கள் லட்சுமி பூஜையில் பங்கேற்றவர்களின் வாகனங்கள் அடித்து நொறுக்கி கடைகளுக்கு தீ வைத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அம்மாநில பாஜக சுகந்த் மஜும்தர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு இந்த தாக்குதலை காவல்துறை தடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். 

மேலும் மொமின்பூர் வன்முறையை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்காததால் உடனடியாக மத்திய பாதுகாப்பு படையை அனுப்புமாறு உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muslims attack those celebrating Lakshmi Puja in West Bengal


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->