முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஷதாப் கான்! - Seithipunal
Seithipunal


ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியாயி ஏற்படுத்தியுள்ளது. 

முகேஷ் அம்பானிக்கு நேற்று ஒரு மின்னஞ்சல் வந்துள்ளது. அந்த மின்னஞ்சலில் "நீங்கள் 20 கோடி ரூபாய் கொடுக்கவில்லை என்றால், உங்களைக் கொன்றுவிடுவோம். 

இந்தியாவில் திறமையான துப்பாக்கிச் சுடுபவர்கள் இருக்கிறார்கள்" என்று பணத்திற்காக கொலை மிரட்டல் விடுத்திருந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த தொழிலதிபர் முகேஷ் அம்பானி, காவல்துறையில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

விசாரணையில் கொலை மிரட்டல் விடுத்த நபர் மும்பையை சேர்ந்த ஷதாப் கான் என்பது தெரிய வந்தது. மும்பையின் காம்தேவி காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, இதுகுறித்து காவல்துறையினர் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mukesh Ambani police complaint


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->