கர்நாடகாவில் பரிதாபம்.! மின்சாரம் தாக்கி தாய் - 2 மகன்கள் பலி.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் மின்சாரம் தாக்கி தாய் மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டத்தில் உள்ள தனகரகா பகுதியை சேர்ந்தவர் ஜனரம்மா(45). இவரது கணவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்து விட்டார். இவர்களது மகன்கள் சுரேஷ் (23), மகேஷ் (20). இந்நிலையில் வழக்கம்போல் நேற்று காலை தாய் மற்றும் இரண்டு மகன்கள் தங்களது விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது நிலத்தின் அருகே சென்றபோது, மின்வயர் அறுந்து நிலத்தில் கிடந்துள்ளது. இதை கவனிக்காத ஜனரம்மா மின் வயரை மிதித்துள்ளார்.

இதில் ஜனரம்மாவை மின்சாரம் தாக்கியுள்ளது. இதைப் பார்த்த இரண்டு மகன்களும் காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்பொழுது இவர்கள் மீதும் மின்சாரம் பாய்ந்து மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், மூன்று பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mother and two sons killed by electrocution in Karnataka


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->