இந்தியா வருகை தந்துள்ள மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர்: ஜெய்சங்கருடன் சந்திப்பு..!
Meeting with Maldivian Foreign Minister Jaishankar
இந்தியாவுக்கும் மாலைதீவுக்கும் இடையேயான உறவில் கடந்த ஆண்டு பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மாலத்தீவில் சுற்றுலா துறையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. அந்நாட்டின் கஜானா திவால் ஆகும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதையடுத்து, இரு நாடுகளும் மேற்கொண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து, இருநாட்டு உறவும் மீண்டும் சுமூக நிலைக்கு திரும்பியது.
இதையடுத்து, இரு தரப்பு வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் மேலும் வளர்ச்சியடைந்ததோடு, மாலத்தீவு இந்தியா நிதியுதவியுடன் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், 03 நாட்கள் அரசு முறை பயணமாக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா கலீல் இந்தியா வந்துள்ளார். இன்று டெல்லியில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை அவர் இன்று சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது இரு தரப்பு உறவு மற்றும் வர்த்தகம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்நிலையில், பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு மாலத்தீவு அரசு தரப்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு ஆதரவு அளிப்பதாக மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர் அப்துல்லா கலீல் தெரிவித்துள்ளார்.
English Summary
Meeting with Maldivian Foreign Minister Jaishankar