மருந்தகங்களுக்கு தீ வைத்த மருத்துவ மாணவர்கள்.. விசாரணையில் அதிர்ச்சி தகவல்.! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலம் தர்பங்கா நகரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் போதைப்பொருள் சார்ந்த மருந்துகளை தர மறுத்ததால் மருந்துகள் கடை விற்பனையாளர்களுக்கும், மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் மோதலில் முடிந்தது.

இதனையடுத்து அங்கிருந்த 4 கடைகள் மீது மருத்துவ மாணவர்கள் சிலர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். இதில் மருத்துவ கடை ஊழியர் ஒருவருக்கு கத்தியால் குத்தப்பட்டு உள்ளார்.

இந்த தீவிபத்தில் கடைகள் மற்றும் பல வாகனங்கள் எரிந்து சாம்பலாகின. இதையறிந்த மருத்துவ விற்பனையாளர் வர்த்தக சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. உடனடியாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு மோதலில் ஈடுபட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தர்பங்கா காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Medical student fired in pharmacy in bhihar


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->