அரசு வேலை வாங்கி தருவதாக பண மோசடி - கையும் களவுமாக சிக்கிய வாலிபர்.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் மோகன் குமார். இவர் கர்நாடக தலைமைச் செயலகம் செயல்படும் விதான சவுதா கட்டிடத்தின் பாதுகாப்பு அதிகாரியாக உள்ளதாகவும், அரசு வேலை வாங்கித் தருவதாகவும் பல பெண்களிடம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.

அந்த வகையில், கடந்த 15-ம் தேதி கிரிஜா என்ற பெண்ணிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி, விதான சவுதாவிற்கு சான்றிதழ்களுடன் அவரை வரவழைத்து சரிபார்த்து, பின்னர் வேலை வாங்கித் தருவதாக 10 லட்ச ரூபாய் கேட்டுள்ளார். 

இதனை உண்மை என்று நம்பிய அந்த பெண் முதல் தவணையாக 2.50 லட்ச ரூபாயை மோகன்குமாரிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிய மோகன் குமார் மீதமுள்ள பணத்தை பணி நியமன ஆணை வாங்கியவுடன் தருமாறு கூறியுள்ளார்.

ஆனால், மோகன் குமார் கூறியது போல், கிரிஜாவுக்கு பணி நியமன ஆணையை வழங்க வில்லை. இது தொடர்பாக கிரிஜா மோகன்குமாரை போனில் தொடர்பு கொண்ட போது அவர் தன்னை ஏமாற்றியது தெரிய வந்தது. 

உடனே கிரிஜா சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மோகன்குமாரை நேற்று கைது செய்தனர். மேலும், அவரிடம் சம்பவம் தொடர்பாக தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for money fraud in karnataga


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->