மகாராஷ்டிரா || பெண் குழந்தை பிறந்த ஆத்திரம் - தந்தை செய்த கொடூரச் செயல்.! - Seithipunal
Seithipunal


பெண் குழந்தை பிறந்த ஆத்திரம் - தந்தை செய்த கொடூரச் செயல்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் ஜல்காவ் ஜாம்னேர் தாலுகாவை சேர்ந்தவர் கோகுல் ஜாதவ். இவருக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் உள்ளதில், மூன்றாவதாக ஆண் குழந்தைக்கு ஆசைப்பட்ட அவருக்கு கடந்த இரண்டாம் தேதி மீண்டும் பெண் குழந்தை பிறந்தது. 

இதனால், மனமுடைந்த கோகுல் ஜாதவ்க்கு அந்த பச்சிளம் பெண் குழந்தை மீது வெறுப்பு ஏற்பட்டு, கடந்த 10-ம் தேதி பச்சிளம் குழந்தையின் வாயில் புகையிலையை திணித்து வைத்தார். இதனால், குழந்தையின் உடல் நலம் பாதித்து உயிரிழந்தது. 

இதையடுத்து கோகுல் ஜாதவ் குழந்தையின் உடலை பர்தாபூர் வாகோட் சாலையில் குழிதோண்டி புதைத்துள்ளார். இதற்கிடையே பிறந்த குழந்தையை பதிவு செய்யும் பணிக்காக ஆரம்ப சுகாதார மைய ஊழியர் கோகுல் ஜாதவ் வீட்டிற்கு வந்துள்ளார். 

அப்போது, குடும்பத்தினர் குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதைக்கேட்டு சந்தேகமடைந்த ஊழியர் மருத்துவருக்கு தகவல் தெரிவித்தார். அதன் படி மருத்துவர் வீட்டிற்கு வந்து கோகுல் ஜாதவிடம் விசாரித்தார். 

விசாரணையில், அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததனால் சந்தேகமடைந்த மருத்துவர் போலீஸில் புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கோகுல் ஜாதவிடம் நடத்திய விசாரணையில் அவர் குழந்தையைக் கொன்றதை தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து கோகுல் ஜாதவை கைது செய்தனர். மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவர்களது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவும் போலீஸார் முடிவு செய்துள்ளனர். 

அதுமட்டுமல்லாமல், பிரேத பரிசோதனைக்காக அந்தக் குழந்தையின் உடலை தோண்டி எடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.3-வதும் பெண் குழந்தை பிறந்த காரணத்திற்காக அந்த குழந்தையை தந்தையே கொன்ற கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kill girl baby in maharastra


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->