கொச்சி விமான நிலையத்தில் ரூ.20.24 லட்சம் மதிப்புள்ள 407.85 கிராம் தங்கம் பறிமுதல்.! - Seithipunal
Seithipunal


கேரளாவில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு வளைகுடா நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அடிக்கடி தங்கம் கடத்தி வரும் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக சுங்கத்துறை அதிகாரிகள் கேரளாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், நேற்று துபாயில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் படி, சுங்கத்துறை அதிகாரிகள் விமான நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, துபாய் நாட்டில் இருந்து கொச்சி விமான நிலையத்திற்கு வந்த விமானத்திலிருந்து இறங்கி வந்த பயணிகளில் ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவர் உடமைகளை சோதனை செய்தனர். 

அதில், அந்த பயணி அணிந்திருந்த பெல்டில் தங்கம் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்தனர். சுமார் 407.85 கிராம் உடைய அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.20.24 லட்சம் ஆகும். அதன் பின்னர், அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for gold kidnape from dubai


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->