மோடி குறித்து சர்ச்சை பேச்சு - மர்ம நபரை தட்டித்தூக்கிய போலீஸ்.! - Seithipunal
Seithipunal


நொய்டாவில் உள்ள ஹோஷியர்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராம்பாத் யாதவ். இவர் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித் ஷா, உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோர் குறித்து சர்ச்சையான கருத்துக்களை பேசி, அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை பார்த்த காவல் துறை தாமாக முன்வந்து விசாரணை நடத்தியதில், வீடியோ வெளியிட்டது ராம்பாத் யாதவ் என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் ராம்பாத் யாதவ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

பின்னர் அவரை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறை சாபில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் உத்தர பிரதேச முதல்வர் உள்ளிட்டோர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்த ராம்பாத் யாதவ் கைது செய்யப்பட்டார். 

அவர் பேசி, வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. காவல் துறை இந்த வீடியோவை பார்த்து, தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்துள்ளது," என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for controversy create against modi


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->