'எஸ்ஐஆர்-ஐ எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வேன்: நானே வாதாடுவேன்' என்கிறார் மம்தா பானர்ஜி..!
Mamata Banerjee says she will file a case against the SIR in the Supreme Court and argue the case herself
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும், தான் ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞர் என மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மாநிலத்தின் தெற்கு 24 பர்கானாஸில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசியபோது அவர் மேலும் கூறியதாவது:
வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) காரணமாக மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்பட்டதற்கும், பலர் இறந்ததற்கும் எதிராக நாளை நாங்கள் நீதிமன்றத்தை நாடுகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன், அனுமதிக்கப்பட்டால், நான் உச்ச நீதிமன்றத்தில் ஒரு சாதாரண பிரஜையாக வாதாடுவேன் என்றும், நானும் ஒரு பயிற்சி பெற்ற வழக்கறிஞர் தான். இந்த விவகாரம் தொடர்பாக அரசு சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், யாராவது தங்கள் வயதான பெற்றோரை தங்கள் அடையாளத்தை நிரூபிக்க வரிசையில் நிற்க வைத்தால் பாஜக தலைவர்கள் எப்படி உணருவார்கள்..? என்றும், எஸ்ஐஆர் பணி தொடங்கியதில் இருந்து பலர் பயத்தால் இறந்துவிட்டதாகவும், மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் பேசியுள்ளார்.
மேலும், மேற்கு வங்கத்தில் எந்தவொரு வக்ப் சொத்துக்களையும் கையகப்படுத்த அனுமதிக்க மாட்டேன் என்று அறிவித்துள்ளார். இந்த அநீதிக்கு காரணமானவர்கள் அதற்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும் என்றும் எச்சரித்துள்ளார். பாஜ எந்த மதத்தையும் நம்பவில்லை என்றும், பொய்களைப் பரப்புவதில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
English Summary
Mamata Banerjee says she will file a case against the SIR in the Supreme Court and argue the case herself