இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவனை தீர்த்துக்கட்டிய மனைவி... 8 வருடம் கழித்து சிக்கிக்கொண்ட சோகம்.!
Maharashtra Man Murder by Wife due to Insurance Money
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லாத்தூர் பகுதியை சார்ந்தவர் அன்னராவ். இவரது மனைவி ஜோதி. அன்னராவ் கடந்த 2012 ஆம் வருடத்தில் பாபால்காவ் பகுதியில் நடைபெற்ற வாகன விபத்தில், வாகனம் மோதி உயிரிழந்தார்.
இந்த நிலையில், அண்ணராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக காப்பீட்டு நிறுவனம் சார்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர்.
இந்த விசாரணையில் எந்த விதமான முன்னேற்றமும் ஏற்படாத நிலையில், கடந்த 3 மாதமாக நிலுவையில் இருந்த இவ்வழக்கு மீண்டும் விசாரணை செய்யப்பட்டுள்ளது. இதன்போது இன்சூரன்ஸ் பணத்திற்காக கணவரை மனைவி ஜோதி கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. இதனையடுத்து ஜோதியை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
Maharashtra Man Murder by Wife due to Insurance Money