என்னை கல்யாணம் பண்ணிக்க! 10ம் வகுப்பு மாணவனுக்கு தொல்லை கொடுத்த 35 வயது பெண் கைது! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசம் ராட்லாமைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர், 10ம் வகுப்பு மாணவனை கடந்த ஒரு வருடமாக திருமணம் செய்ய வற்புறுத்தியதாக புகார் எழுந்தது. இதையடுத்து, அந்தப் பெண்ணை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இந்தப் பெண், கணவரிடம் விவாகரத்து பெற்றதோடு, இருமுறை திருமணம் செய்து கொண்ட பின் தனியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு 14 வயது மகளும், 9 வயது மகனும் உள்ளனர்.

இந்த நிலையில், பள்ளியில் பயிலும் 15 வயது சிறுவனை தனது வீட்டிற்கு அழைத்து, திருமணத்திற்கு பலமுறை அழுத்தம் கொடுத்ததாக தெரிகிறது. தொடர்ந்து நிகழ்ந்த இந்த அத்துமீறல் காரணமாக, மாணவன் தனது தந்தையிடம் இது குறித்து கூறியுள்ளார்.

தந்தை அளித்த புகாரின் பேரில், போலீசார் அதே நாளே அந்த பெண்ணை கைது செய்தனர். பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், நீதிமன்றம் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

madhya pradesh 35 y old woman arrest


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->