வனப்பகுதியில் ஒரே துப்பட்டாவில் காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை.! போலீசார் தீவிர விசாரணை - Seithipunal
Seithipunal


சிக்கமகளூரு மாவட்டத்தில் காதல் ஜோடி ஒரே துப்பட்டாவில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் குள்ளன்பேட்டை அருகே சக்திஹள்ளி கிராம வனப்பகுதியில் உள்ள மரத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு காதல் ஜோடி ஒரே துப்பட்டாவில், திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

இதைப் பார்த்து வழியாக சென்றவர்கள் அதிர்ச்சடைந்து இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டதில் தற்கொலை செய்து கொண்டவர்கள் தேவரகெரே காபி தோட்ட பகுதியை சேர்ந்த தர்ஷன் (21) என்பதும், ஷாசன் மாவட்ட பகுதியை சேர்ந்த பூர்விகா(19) என்பதும் தெரிய வந்தது. மேலும் இவர்கள் இரண்டு பேரும் தீவிரமாக காதலித்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து, காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lovers commits suicide in chikkamakaluru Karnataka


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->