அதிரடியா உயர்த்தப்பட்ட மதுபானங்களின் விலை! அதிர்ச்சியில் மது பிரியர்கள்! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் 450-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் இயங்கி வருகின்றது. இந்த மதுபான கடைகளில் 1800-க்கும் அதிகமான மது வகைகள் விற்பனை செய்யப்படுகிறது. அண்டை மாநிலங்களான புதுச்சேரி சுற்றி உள்ள மாநிலங்களை விட பல்வேறு விதமான மதுபான வகைகள் கிடைப்பதாலும், விலை குறைவாக இருப்பதாலும் புதுச்சேரிக்கு மது பிரியர்கள் வருகை அதிக அளவில் உள்ளது.

இதனால் புதுச்சேரி மாநிலத்தில் வரி வருவாய் கலால் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. மதுபானங்களுக்கு 4 வரிகள் வசூலிக்கப்படுகிறது. இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மதுபான வகைகள் விலை குறைவானது. 4 ரகமாக விலையில் மது விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் புதுச்சேரி கலால்துறை திடீரென வரியை உயர்த்தி உள்ளனர். இதன்படி குவாட்டர் ஒரு கேஸ் 12 பாட்டில்கள் ரூ.399 வரை உள்ள மதுபானங்களுக்கு ரூ.75 ஆக இருந்த கலால் வரி, தற்போது  ரூ.93 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

உயர் ரக குவாட்டர் ஒரு கேஸ் ரூ.400 முதல் ரூ.600-க்கு மேலான மதுபானங்களுக்கு ரூ.100 ஆக இருந்த கலால்வரி ரூ.110 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இது குறித்து கலால்துறை அதிகாரி கூறியவை, புதுச்சேரியில் மது பானங்களுக்கான கலால் வரி 2 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு மாதந்தோறும் ரூ.2 கோடி கூடுதல் வருமானம் கிடைக்கும். கலால் வரி உயர்வு காரணமாக குறைந்த மற்றும் சாதாரண விலை மது பாட்டில் குவாட்டருக்கு ரூ.5ம், முழு பாட்டில் ரூ.15 வரையிலும் விலை உயர வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

liquor drink price hiked in pondicherry


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->