நீட் தேர்வால் வெளிநாட்டில் பறிபோன உயிர்.. நீட் நாட்டிற்கே அவமானம்.. குமாரசாமி கொந்தளிப்பு.!! - Seithipunal
Seithipunal


நீட் தேர்வு நாட்டிற்கே அவமானம் என கர்நாடகாவின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில், நீட் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு, மருத்துவக் கல்வி படிக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்களின் கனவுகளை சிதைத்து வருகிறது. நீட் தேர்வு பெற்றோர் மற்றும் மாணவர்களின் மனநிலையை மாறியுள்ளது. உயர்கல்வி என்பது உள்ளவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டு, இல்லாதவர்களுக்கு மறுக்கப்படுகிறது. 

தகுதி என்ற போர்வையில் திறமையான, பொருளாதார ரீதியாக நலிவடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி இழைக்கும் நீட் தேர்வின் வெட்கமற்ற முகத்தின் பிரதிபலிப்பே உக்ரைன் கார்கீவ் நகரில் நடைபெற்ற குண்டுவீச்சில் தாக்குதலில் பலியான மருத்துவ மாணவர் நவீனின் சோகமான மரணம்.

நவின் எஸ்எஸ்எல்சியில் 96 சதவீதமும், பியூசியில் 97 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளார். அப்போதும், உலகளாவிய கல்வியின் காசி என்று கருதப்படும் இந்தியாவில் அவருக்கு மருத்துவ சீட் மறுக்கப்பட்டது. ஒரு கிராமப்புற மாணவர் இவ்வளவு அதிக சதவீதத்தைப் பெறுவது எளிதானது அல்ல. இருந்தும் மருத்துவ சீட் மறுக்கப்பட்டது.

இந்தியாவில் மருத்துவ சீட் மறுக்கப்பட்ட பிறகு, நவீன் தனது கனவை நனவாக்கி மருத்துவ டாக்டராவதற்கு உகரைன் சென்றார். இளைஞனின் மரணம் ‘விஸ்வ குரு’ ஆக ஏங்கும் இந்தியாவை `சுய மனசாட்சியை’ கேள்வி கேட்க வைத்துள்ளது.இதற்கு யார் பொறுப்பு?. நீட் தேர்வுக்கு பிறகு ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு மருத்துவக் கல்வி கனவாகி விட்டது. டுடோரியல்கள் காளான்களாக வளர்ந்து மாணவர்களிடம் இருந்து லட்சக்கணக்கான ரூபாய்களை பறித்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 99% மாணவர்கள் இந்தப் பயிற்சியில் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர்.

அரசு மற்றும் கிராமப்புற மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது சாத்தியமில்லை. இந்த உண்மையை உணர்ந்து, டுடோரியல்கள் தங்கள் சந்தையை விரிவுபடுத்தி, நவீன் போன்ற மாணவர்களின் சடலங்களில் நடனமாடுகின்றன. பணக்காரர்களுக்கு உயர்கல்வி வழங்குவதற்காக மட்டுமே உள்ள நீட் தேர்வுக்கு எதிராக அனைவரும் குரல் எழுப்ப வேண்டும்.

வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பெறும் 90% மாணவர்கள் இந்தியாவில் நுழைவுத் தேர்வில் தோல்வி அடைகிறார்கள் என்று மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியின் கருத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மருத்துவக் கல்விக்கான செலவை ஒப்பிட்டுப் பேசுவதற்கு இது நேரமில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

புதிய சர்ச்சை அல்லது விவாதத்திற்கு வழிவகுக்கும் மருத்துவக் கல்விக்கான செலவை ஒப்பிட விரும்பவில்லை என்று மத்திய சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கையை வெளியிடுவதன் பின்னணியில் உங்கள் நோக்கம் என்ன? அவரது இந்த கருத்து பல யூகங்களுக்கு வழிவகுத்தது. பயிற்சிகளுக்குப் பின்னால் இருப்பது யார்? இவர்களுக்கு மத்திய அரசு ரகசிய ஆதரவா? நீட் தேர்வால் கல்வி அராஜகத்தால் இன்னும் எத்தனை மாணவர்கள் இறக்க வேண்டும்?

நவின் மரணம் நீட் தேர்வின் நோக்கத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளது. ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சி பணக்காரர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்ட மருத்துவக் கல்வி முறை நாட்டுக்கே அவமானம் என தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Kumaraswamy tweet for neet


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->