கேரளாவில் 5 நாட்களுக்கு கனமழை..7 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.!
Kerala next 4 days heavy rain
வட கர்நாடக கடற்கரையில் இருந்து மன்னார் வளைகுடா வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது.
இதன் காரணமாக கேரளாவில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இந்த மழை மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கேரளாவில் மேலும் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கேரளாவில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதை தொடர்ந்து, மாநில பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். மேலும், திருவனந்தபுரம், பத்தினம்திட்டா, எர்ணாகுளம், கோட்டயம், வயநாடு, மலப்புரம் மற்றும் இடுக்கி ஆகிய ஏழு மாவட்டங்கள் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Kerala next 4 days heavy rain