பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத்தொடர்பு.. இறுதியில் நடந்த சோகம்.!!
kerala dog for illegal affair
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த சாகாய் பகுதியில் நாய் ஒன்றை அதை வளர்த்து வந்த ஆதரவாளர் துரத்திக்கொண்டு இருந்தார். இதனை கண்ட மக்கள், விலங்கு நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து அங்கு வந்த விலங்கு நல ஆர்வலர் நாயை மீட்டனர். இதனப்பிறகு நாய் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கடிதத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கடிதத்தில், இது மிகவும் நல்ல பழக்கங்கள் கொண்ட நாய். இது குறைக்க மட்டும் தான் செய்யும் யாரையும் கடிக்காது.
இந்த நாய் பால், முட்டை, பிஸ்கெட் ஆகியவை அதிகம் சாப்பிடும். வெறுக்கத்தக்க செயலை இது செய்துள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இறுதி வரியில் இந்த நாய் பக்கத்து வீட்டில் உள்ள வேறு ஒரு இனத்தை சேர்ந்த நாயுடன் உறவு வைத்துக் கொண்டதால் இந்த நாயே துரத்தி விட்டதாக அந்த கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது.
இது தொடர்பாக விலங்கு நல ஆர்வலர் கூறுகையில், இது வெறும் நாய் தான். அதற்கு என்ன தெரியும், பக்கத்து வீட்டு நாயுடன் உறவு வைத்துக் கொண்டது ஒரு குற்றமா? தற்போது இந்த நாயை வேறு ஒருவருடன் கொடுக்கப்பட்டு முறையாக பராமரிக்கப் படுகிறது. இருப்பினும் தனது முன்னாள் உரிமையாளர் வந்து தன்னை மீட்டு எடுத்து செல்லமாட்டார் என்ற ஏக்கத்துடன் சாலையை பார்த்தபடியே இந்த நாயை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.
English Summary
kerala dog for illegal affair