என்னடா பெட்ரோல், டீசல் விலையை ஏத்திகிட்டே போறீங்க?.. பங்கில் நடந்த பஞ்சாயத்து.!
Karnataka Petrol Punk Protest Man Troughed cane 11 June 2021
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்து இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. அந்த வகையில், பெட்ரோல், டீசல் விலை தினமும் நிர்ணயிக்கும் நடைமுறை எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
பொதுத் துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி முதல் மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் இல்லாமல் இருந்தது. ஜூன் முதல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.
சென்னையில் இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்துள்ளது. ஒரு லிட்டருக்கு பெட்ரோல் விலை 0.25 காசுகள் அதிகரித்து, ரூ.97.19-க்கும், டீசல் விலை ஒரு லிட்டருக்கு டீசல் விலை 0.27 காசுகள் அதிகரித்து, ரூ.91.42-க்கும் விற்பனை ஆகிவருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. கர்நாடக மாநிலத்தில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 98.75 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், டீசல் லிட்டருக்கு ரூ.91.73 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியா முழுவதும் பெட்ரோல், டீசல் விலைக்கு எதிராக மாநில கட்சிகள் பல கோரிக்கை வைத்து வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் சார்பாக போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் எதிர்க்கட்சிகள் நடத்திய போராட்டத்தின் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், போராட்டத்தில் கலந்துகொண்ட நபர் கேனை கையில் எடுத்து வீதியில் வீசி எரிந்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Karnataka Petrol Punk Protest Man Troughed cane 11 June 2021