தீ விபத்தில் தாய், மகள் என 2 பேர் பரிதாப பலி.. வெளியான பதைபதைப்பு வீடியோ.!
Karnataka Bangalore Apartment Fire Accident 2 Died Police Investigation Video Trending
அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தாய், மகள் என 2 பேர் தீயில் கருகி பரிதாபமாக பலியாகினர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூர் பேகூர், பன்னர்கட்டா தேவரசிக்கனஹள்ளி பகுதியில் அஸ்ரிதா அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. நேற்று மாலை 04:30 மணியளவில் அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டில் தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து தீயணைப்பு மற்றும் மீட்பு படையினருக்கும், பேகூர் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தும் பலனில்லாது, தீ மளமளவென பற்றி 4 மாடிகளுக்கும் பரவியது. நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

பின்னர், அங்கு சிக்கியிருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபடுகையில், 210 ஆவது அறையெண் கொண்ட வீட்டில் வசித்து வந்த லட்சுமி தேவி என்ற 82 வயது மூதாட்டி, மூதாட்டியின் 59 வயது மகள் பாக்யா ஆகியோர் தீயில் உடல் கருகி உயிரிழந்தது தெரியவந்தது.
மேலும், 5 பேர் பலத்த தீக்காயம் அடைந்த நிலையில், அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். இவர்களில் 2 பேரின் உடல்நிலை மோசமாக உள்ளது. முதற்கட்ட விசாரணையில், இரண்டாவது மாடியில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

விபத்தின் போது குடியிருப்பு வீடுகளில் இருந்த பலரும் பணிகளுக்காக சென்றுவிட்டதால் பெரும் அசம்பாவித விபத்து தவிக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் பல இலட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள பேகூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்து குறித்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி பெரும் வைரலாகி வருகிறது. மேலும், அடுக்குமாடி குடியிருப்பதை சார்ந்த பெண்மணி கம்பிக்குள் சிக்கி தீயில் கருகும் பதைபதைப்பு வீடியோவும் வெளியாகியுள்ளது.
Tamil online news Today News in Tamil
பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.
English Summary
Karnataka Bangalore Apartment Fire Accident 2 Died Police Investigation Video Trending