கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசம்..கடைசியில் கணவருக்கு நடந்த கொடூரம்!
Wife's affair with a lover the horrific thing that happened to the husband at the end
கள்ளக்காதல் விவகாரத்தில், மனைவி, கள்ளக்காதலனுடன் சேர்ந்துகணவனை தீர்த்துக்கட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் சதாசிவ காலனியைச் சேர்ந்த சுரேஷ் பாபு ,ஓட்டல் நடத்தி வந்தார். அதே பகுதியில் உள்ள ஓட்டலில் இவரது மனைவி அனிதா வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்துவந்த பாபாவலி என்பவருடன் அனிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்ததாக தெரிகிறது
மனைவியின் நடத்தையில் சந்தேகம் அடைந்த கணவர் சுரேஷ்பாபு அவரை கண்டித்தார். இதனால் அனிதா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து கணவன் ஓட்டலுக்கு சென்றதும், கள்ளக்காதலன் பாபாவலியை வீட்டுக்கு அழைத்து உல்லாசம் அனுபவித்து வந்தார். மனைவியை கண்டித்தும் அவர் திருந்தாததால் கணவர் தினமும் மது குடித்துவிட்டு தகராறு செய்து வந்தார்.
இந்தநிலையில் கணவனை தீர்த்துக்கட்டினால்தான் உல்லாசமாக இருக்க முடியும் என்று முடிவு செய்த அனிதா, கள்ளக்காதலனுடன் சேர்ந்து அவரை கொலை செய்ய முடிவு செய்தார். சம்பவத்தன்று ஓட்டலை மூடி விட்டு மது அருந்திய சுரேஷ்பாபு, போதையில் வீட்டுக்கு வந்துகொண்டிருந்த தகவலை அனிதா கள்ளக்காதலனுக்கு தெரிவித்தார்.
இதையடுத்து வழியில் தயாராக இருந்த பாபாவலி, சுரேஷ்பாபு மீது காலி மது பாட்டில்களை வீசி எறிந்து , கையில் வைத்திருந்த 'ஸ்குரூ டிரைவரால்' சரமாரியாக பாபாவலி குத்தி,அவர் மீது, அருகில் கிடந்த பெரிய பாறாங்கல்லை தூக்கி தலையில் போட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ்பாபு பிணமானார். உடனே
பிணத்தை கைப்பற்றிய போலீசார், கொலை குறித்து விசாரித்தனர். அப்போது மோப்ப நாய், பாபாவலியின் வீட்டில் போய் நின்றது. அவரை பிடித்து விசாரித்தபோது, கள்ளக்காதல் விவகாரத்தில், அனிதாவுடன் சேர்ந்து சுரேஷ்பாபுவை தீர்த்துக்கட்டியதை அவர் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
Wife's affair with a lover the horrific thing that happened to the husband at the end