கச்சேரி நிகழ்ச்சியில் நடனமாடும் பெண்ணை திருமணம் செய்த மகன்: 03 வருடங்களுக்கு பின் அடித்தே கொலை செய்த தாய் உள்ளிட்ட குடும்பத்தினர்..!
The mother and her family beat their son to death years later after he married a woman who danced at a concert
உத்தர பிரதேச மாநிலத்தில் பெற்ற மகனை, தாய் உள்பட அவரது சகோதர சகோதரிகள் சேர்ந்து அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது மகன் கச்சேரி நிகழ்ச்சியில் நடனமாடும் பெண்ணை திருமணம் செய்து கொண்டு, இரண்டு வருடத்திற்குப் பிறகு சொந்த ஊர் திரும்பியபோது இந்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
கோரக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் அமித், வயது 30. இவர் கடந்த 2022-ஆம் ஆண்டு கச்சேரியில் நடனமாடும் பெண்ணை திருமணம் செய்துள்ளார். இதற்கு தாய் மீரா மற்றும் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
-hcuqn.png)
இதனால், அவர் மனைவி அழைத்துக்கொண்டு டெல்லி சென்றுள்ளார். அங்கு அவர்கள் சுமார் 03 வருடங்கள் இருந்துள்ளனர். பின்னர் தனது குடும்பத்தினரை பார்க்க சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். 03 வருடம் கழித்தும்அவரது தாய் மீராவுக்கு அவர்கள் மீது கோபம் குறையவில்லை.
அமித் மற்றும் அவரது மனைவி வீட்டிற்கு வந்ததும் அவர்களுடன் தாய் மீரா, சகோதரிகள், சகோதரர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் வாக்குவாதம் மோதலாக மாறிய நிலையில், இரும்பு கம்பி, கட்டைகள் கொண்டு கடுமையாக அமித் மற்றும் அவரது மனைவியை தாக்கியுள்ளனர்.
-8w5jc.png)
இதில் அமித் படுகாயம் அடைந்த அமித்தை காப்பாற்ற முயன்ற போது அவரது மனைவியையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இது தொடர்பாக அக்கம் பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர்.
கடுமையாக தாக்கப்பட்டு உயிருக்கு போராடிய இருவரையும் மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில்
அமித் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அவரது மனைவி, சிகிச்சை பெற்று வரும் நிலையில், அமித் மனைவின் புகார் அடிப்படையில் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
English Summary
The mother and her family beat their son to death years later after he married a woman who danced at a concert