போதைப்பொருள் வழக்கு: நடிகர் ஸ்ரீ கிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்..!
Actor Sri Krishna remanded in judicial custody for 14 days
நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதற்கு பின் இன்னும் நிறைய சினிமா பிரபலங்கள் சிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னதாக, அ.தி.மு.க. ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகியான பிரசாத்துக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக பிரதீப் என்பவரை கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீசார் கைது செய்தனர்.

அவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் கிருஷ்ணாவுக்கும் போதைப்பொருள் வழக்கில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது நடிகர் கிருஷ்ணாவையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் கிருஷ்ணாவை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, நடிகர் கிருஷ்ணா, கெவின் ஆகிய இருவரையும் ஜூலை 10-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க எழும்பூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Actor Sri Krishna remanded in judicial custody for 14 days