நேரலை வீடியோ வெளியிட்டு இளம்பெண் தற்கொலை! - Seithipunal
Seithipunal


இமாசலப்பிரதேசம் சோலன் மாவட்டத்தின் சுபாத்து கண்டோன்மென்ட் பகுதியில் ஏற்பட்ட ஒரு துயரமான சம்பவம் உள்ளூர் மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சமூக வலைதளமான முகநூலில் (Facebook) நேரலை (live) மூலம், 20 வயது இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்யப்போவதாக கண்ணீர் மல்கக் கூறிய வீடியோ பரவியது. “தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை” எனவும் அந்த இளம்பெண் பதிவு செய்தார்.

வீடியோவைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் வழங்கினர். போலீசார் அந்த வீடியோவில் காணப்பட்ட இடத்தைக் கண்டறிந்து, அது அருகிலுள்ள ஹோல்கி கிராமம் என உறுதி செய்தனர். தற்கொலை செய்யவிருக்கும் இளம்பெண்ணை மீட்கும் நோக்கில் விரைந்தனர்.

அதே நேரத்தில், அந்த வீடியோவை சந்தையில் இருந்த சில உள்ளூர் வியாபாரிகளும் பார்த்தனர். அவர்கள், அந்த இளம்பெண்ணின் தாய் மற்றும் அண்ணனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டிற்கு விரைந்த போதும், துரதிருஷ்டவசமாக, அந்த இளம்பெண் ஏற்கனவே தற்கொலை செய்து கொண்டதை கண்டனர்.

பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் உடலை மீட்ட போலீசார், தற்கொலையின் காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த  பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Teenage girl commits suicide after live video


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->