இப்படியெல்லாம் வராதீங்க! இந்தியர்களுக்கு ஈரான் நாடு விடுத்த எச்சரிக்கை!
Iran Govt Announce for Indian people
ஈரானில் மூன்று இந்தியர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, சட்டவிரோதமாக இயங்கும் பயண நிறுவனங்கள் மூலம் வெளிநாடு செல்ல வேண்டாம் என ஈரான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஹுசன்ப்ரீத் சிங், ஜஸ்பால் சிங் மற்றும் அம்ரித்பால் சிங் ஆகியோர், உள்ளூர் ஏஜெண்ட் ஏற்பாட்டில் துபாய் மற்றும் ஈரான் வழியாக ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டனர். கடந்த மே 1ம் தேதி ஈரான் சென்ற அவர்களை அங்கு ஒரு குழுவினர் கடத்தி, குடும்பத்தினரிடம் ரூ.1 கோடி பணத்தை கொடுக்கக் கேட்டுள்ளனர்.
அவர்களைத் தூக்கி கட்டியபடி, உடலில் அடையாளக்குறிகள் மற்றும் காயங்களுடன் உள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்டுள்ளன. சில நாட்கள் மட்டுமே குடும்பத்துடன் தொடர்பில் இருந்த இவர்களிடம், மே 11ம் தேதிக்குப் பின் தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இந்திய தூதரகம் மூலம் ஈரான் அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை விசாரித்து வரும் ஈரான் அரசு, சட்டவிரோத வழிகளில் வெளிநாடு செல்லும் முயற்சிகள் ஆபத்தானவையாக இருக்கலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
English Summary
Iran Govt Announce for Indian people