சந்திரயான்- 2 விண்கலத்தால் பல நாடுகளை கிண்டலடித்த ஹர்பஜன் சிங்.! - Seithipunal
Seithipunal


சந்திரயான்- 2 விண்கலம் நேற்று விண்ணில் ஏவப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்திய விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளும், வாழ்த்துக்களும் வந்துகொண்டிருக்கின்றன.

நேற்று பிற்கபல் 2:43 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த விண்கலம், செப்டம்பர் 8-ம் தேதி நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விண்கலம் நிலவை சென்றைய 48  நாட்கள் எடுத்துக்கொள்ளும்.

விஞ்ஞானிகளுக்கு பெருமிதமான தருணம் என இஸ்ரோ தலைவர் சிவன் கூறினார். மேலும் பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோரும் விஞ்ஞானிகளும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தனர். 

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த ஹர்பஜன் சிங் இந்தியாவுக்குப் பாராட்டு தெரிவித்துள்ளதுடன் சில நாடுகளைக் கிண்டல் செய்து தனது பதிவை பதிவிட்டுள்ளார். 

சில நாடுகள் தனது தேசிய  கொடிகளில் மட்டுமே நிலவை  வைத்துள்ளது. ஆனால் ஒரு சில நாடுகள் மட்டும் தான் நிலவில் தனது தேசிய கொடியை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.    


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

indian cricketer harbajan tweet insult some countries


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->