பாகிஸ்தான் அதிகாரிகளை கண்டித்த இந்தியா.. உச்சகட்ட எச்சரிக்கை.!
India Warn Pak 22 November 2020
ஜம்மு காஷ்மீரில் உள்ள நகரொட்டா சுங்கச்சாவடி அருகே பாதுகாப்பு படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டு இருக்கும் போது, லாரியில் பதுங்கியிருந்து வந்த பயங்கரவாதிகளை சுட்டு கொலை செய்தனர். பயங்கரவாதிகள் தரப்பிலும் நடத்தப்பட்ட தாக்குதலில், ஜம்மு காஷ்மீர் காவல் அதிகாரி காயமடைந்தார். பயங்கரவாதிகளிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டது.
இவர்கள் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தை சார்ந்தவர்கள் என்பதும், இவர்கள் மும்பையில் 26 ஆம் தேதி தாக்குதல் நடந்த வந்ததும் தெரியவந்துள்ளது. பாதுகாப்பு படையினரின் அதிரடி நடவடிக்கையால் இந்த தாக்குதல் முயற்சி தவிர்க்கப்ட்டுள்ளது.

இந்த விஷயம் தொடர்பாக இராணுவ வீரர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்த மத்திய அரசு, பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளை நேரில் அழைத்து கண்டித்துள்ளனர். மேலும், பயங்கரவாதிகளை ஆதரவு தெரிவிக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து கண்டித்து அனுப்பியுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
English Summary
India Warn Pak 22 November 2020