டாஸ்மாக் அடி கட்டளைகள்! MRPக்கு மேல் விற்பனை செய்ய முடியாது... தினசரி கண்காணிப்பு கடுமையாக! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத் துறையின் (TASMAC) அனைத்து மதுபானக் கடைகளுக்கும் அதிகபட்ச விலை மீறாமல் மதுபானங்களை விற்பனை செய்ய கடுமையான விதிமுறைகள் அறியத்தரப்பட்டுள்ளது. அதிகாரிகள் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,"
முக்கிய நடைமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள்:
மதுபான விற்பனை: ரொக்கம், கார்டு (PoS) மற்றும் யுபிஐ (UPI) மூலமாக நடக்கும் அனைத்து விற்பனைகளும் மதுபானங்களின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலையை (MRP) முறையாக பின்பற்றி மட்டுமே செய்யப்பட வேண்டும். வேறுபாடு ஏற்பட கூடாது.
அதிக விலை வசூல் தடுப்பு: MRPஐவிட அதிக தொகை வசூலிக்கப்பட்டால், அந்த கூடுதல் தொகையை விற்பனைக்கான தொகையிலிருந்து கழித்து மட்டுமே வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்; வேறு வழியில் சேர்க்கக் கூடாது.


பரிவர்த்தனை பதிவுகள்: ரொக்கம், கார்டு, UPI மூலமாக விற்பனை செய்யப்பட்ட தொகைகள் தனி பதிவில் பராமரிக்கப்பட வேண்டும். கடை பணியாளர்கள் தினசரி விற்பனை விவரங்களை ஒப்பீடு செய்து மாற்றங்கள் உள்ளதா என சரிபார்க்க வேண்டும்.
Digital Transaction அதிகரிப்பு: மாவட்ட மேலாளர்கள் கடைகளில் PoS மற்றும் UPI பயன்படுத்துதல் அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; புதிய கடைகள் திறக்கும் போது கூட அவற்றை உடனடியாக செயல்படுத்த வேண்டும்.
கணினி மயமாக்கல் பயன்பாடு: கையடக்க கருவிகளில் விற்பனையை ஸ்கேன் செய்து PoS/UPI மூலமாக பணம் வசூல் செய்ய வேண்டும்; தவறான முறையில் ஒரு மொத்த தொகையை பெறக்கூடாது.


தினசரி கண்காணிப்பு: ரொக்கம், கார்டு, UPI மூலம் விற்பனை செய்யும் பணம் சரியாக வங்கி கணக்கில் சென்றதா என ஒவ்வொரு நாளும் சரிபார்க்க வேண்டும்; குறைபாடுகள் உள்ளதானால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
கொள்கை நடவடிக்கைகள் குறைபாடு கண்டால்:
குறைவாக வசூல் செய்த தொகையை முழுமையாக வசூல் செய்ய வேண்டும்.
குறைவான தொகைக்கு 50% அபராதம் மற்றும் 2% மாதவட்டி விதிக்கப்படும்.
சம்பந்தப்பட்ட வரியுடன் சேர்த்து GST வசூல் செய்யப்படும்.
தகவல் சமர்ப்பிப்பு: அனைத்து மாவட்டங்களின் மதுபான விற்பனை விவரங்கள், மின்மயமாக பெறப்பட்ட தொகை, ரொக்கமாக பெறப்பட்ட தொகை ஆகியவை தினசரி படிவங்களில் தொகுத்து முதுநிலை மண்டல மேலாளருக்கு அனுப்பப்பட வேண்டும்.
மாவட்ட மேலாளர்கள் பொறுப்பு: குறைவுகள், வேறுபாடுகள் இருப்பின் அன்றே ஆய்வு செய்யப்பட வேண்டும். முதுநிலை மண்டல மேலாளர் தினமும் கண்காணித்து முழுமையாக நடைமுறைகள் பின்பற்றப்படுகிறதா என உறுதி செய்ய வேண்டும்.
அறிக்கை சமர்ப்பிப்பு: மாதந்தோறும் 7-ம் தேதிக்குள் அனைத்து மாவட்ட மேலாளர்களும், முதுநிலை மண்டல மேலாளர்களும் தலைமை அலுவலகத்திற்கு அறிக்கைகள் அனுப்ப வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TASMAC orders Cannot sell above MRP Strict daily monitoring


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->