இந்தியா-சீனா இடையே நிலவும் போர் பதற்றம்.. சீனா எடுத்த திடீர் முடிவு.!!
india vs china problem
இந்தியா - சீனா எல்லை இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனா எல்லையில் தனது படையை நிறுத்து வைத்துள்ளது. இந்தியாவும் எல்லைக்கு தனது படையை குவிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்தியா - சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை நாங்களே தீர்த்து கொள்வோம் என சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார். இரு தரப்பு பேதங்களை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க முடியும்.
கொரோனா வைரசை எதிர்த்து போராட வேண்டியது தான் இரு நாடுகளின் முக்கிய நோக்கம். இந்தியா - சீனா இடையிலான உறவினை இளைஞர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என சீன தூதர் சன் வெய்டாங் தெரிவித்துள்ளார். போர் மேகம் சூழ்ந்த நிலையில் இந்தியாவிற்கான சீன தூதர் சன் வெய்டாங் விளக்கம் அளித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து இந்தியா - சீனா இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். லடாக் எல்லைப் பிரச்னையில் இந்தியா - சீனா இடையே மத்தியஸ்தம் செய்யத் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.