5-வது மாடியில் இருந்து குதித்த பொறியியல் மாணவி: தீவிர விசாரணையில் போலீசார்! - Seithipunal
Seithipunal


தெலுங்கானா, குக்கட்பல்லி பகுதியைச் சேர்ந்தவர் ரேணுஸ்ரீ (வயது 18). இவர் ஹைதராபாத் ருத்ராமில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பொறியியல் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

இவர் நேற்று பல்கலைக்கழக வளாகத்தின் ஐந்தாவது மாடி சுவரில் வெளிப்புறமாக அமர்ந்து கொண்டு செல்போன் பார்த்துக் கொண்டிருந்தார். 

இதனைப் பார்த்த சக மாணவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக ரேணு ஸ்ரீயை கீழே இறங்குமாறு தெரிவித்துள்ளனர். பின்னர் மாணவர்கள் ரேணுவை கீழே இறக்குவதற்காக அவளை நோக்கி ஓடினர். 

மேலும் சிலர் இந்த காட்சியை செல்போனில் வீடியோவாக பதிவு செய்தனர். இந்நிலையில் திடீரென செல்போனை சுவரின் மீது வைத்துவிட்டு மாணவி ரேணு ஸ்ரீ திடீரென கீழே குதித்து விட்டார். 

உடனடியாக அங்கிருந்தவர்கள் ரேணு ஸ்ரீயை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். 

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கட்டிடத்தின் மேல் அமர்ந்து கொண்டு மாணவி யாருக்காவது போன் செய்தாரா அல்லது குறுஞ்செய்தி அனுப்பினாரா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Hyderabad private university student suicide


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->