கேரளாவில் கொடூரம்: நடுரோட்டில் மனைவி மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்த கணவர்.! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலத்தில் நடுரோட்டில் மனைவி மீது பெட்ரோலை ஊற்றி கணவர் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கொட்டாரக்கரா பகுதியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா(26). இவருக்கும் அகில்ராஜ் என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ள நிலையில், கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவியே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால் விசாரணைக்காக நீதிமன்றத்தில் அகில் ராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆஜரானார்கள். இதையடுத்து நீதிமன்றத்தில் இருந்து ஐஸ்வர்யா வீட்டிற்கு சென்ற நிலையில், அவரைப் பின் தொடர்ந்து அகில்ராஜ் தனது மோட்டார் சைக்கிளால் ஐஸ்வர்யாவின் ஸ்கூட்டரை இடித்துள்ளார்.

இதனால் வாகனத்தை நிறுத்திவிட்டு ஐஸ்வர்யா இறங்கிய நிலையில், அவர் மீது பெப்பர் ஸ்ப்ரேவை அடித்துவிட்டு அகில்ராஜ் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் ஐஸ்வர்யா சத்தம் போடவே அப்பகுதியில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.

இதையடுத்து தீக்காயம் அடைந்த ஐஸ்வர்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மனைவி மீது பெற்றோரை ஊற்றி தீ வைத்த கணவர் அகில்ராஜை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Husband poured petrol on his wife and set her on fire in kerala


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->