நெஞ்சை உலுக்கும் கொடூரம்...! மனைவியுடன் தகராறு...பெற்ற மகள் என்றும் பாராமல் 5 வயது குழந்தையை கிணற்றில் வீசிக்கொன்ற தந்தை...!
Heart wrenching cruelty father threw his 5 year old child well ignoring his daughter after dispute his wife
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் கோருகொண்ட மண்டலத்துக்குட்பட்ட காதராடா கிராமத்தைச் சேர்ந்த ராமவரபு ராஜுவுக்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டுவந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நேற்று இருவருக்கும் இடையே ஏற்பட்ட கடுமையான வாய்த்தகராறு திடீரென விபரீதமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆத்திரத்தில் இருந்த ராஜு, வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த தனது 5 வயது மகள் லஹரியை திடீரென தூக்கிக்கொண்டு சென்று அருகிலிருந்த கிணற்றுக்குள் வீசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அதிர்ச்சி சம்பவத்தை கண்டு பதறிய அப்பகுதி மக்கள் உடனடியாக கிணற்றுக்குள் இறங்கி சிறுமியை மீட்க முயன்றனர். இருப்பினும், அதற்குள் தண்ணீரில் மூழ்கி மூச்சுத்திணறலால் லஹரி பரிதாபமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சோக சம்பவம் கிராம மக்களை உலுக்கியுள்ளது.ஊர் மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த காவலர்கள், சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளான ராமவரபு ராஜுவை காவலர்கள் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடும்ப தகராறு காரணமாக சொந்த மகளின் உயிரை பறித்த இந்த கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Heart wrenching cruelty father threw his 5 year old child well ignoring his daughter after dispute his wife