சாரம் பகுதியில் நெஞ்சை உலுக்கிய விபத்து...அலறிய குழந்தைகள்...! வேனுக்குள் சிக்கிய 15 மாணவர்களைப் பத்திரமாக மீட்ட மக்கள்...! நடந்து என்ன...?
Shocking accident Saram area Screaming children People rescued 15 students trapped inside van safely What happened
திண்டிவனம் அருகே இன்று காலை நிகழ்ந்த பதற்றமான சாலை விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பள்ளி வேன் கட்டுப்பாட்டை இழந்து கார் மீது மோதியதுடன் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்ததில் 15 குழந்தைகள் காயமடைந்த சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள சாரம் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான வேன் வழக்கம்போல் இன்று காலை மாணவர்களை வீடுகளில் இருந்து ஏற்றிக்கொண்டு பள்ளியை நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது சாரம் பகுதியை அண்மித்து சென்றபோது, எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் திடீரென சாலையில் சென்ற காரின் மீது மோதி, பின்னர் சாலையோர பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்தது.

இந்த திடீர் விபத்தால் வேனுக்குள் இருந்த குழந்தைகள் கடும் அச்சத்தில் அலறி அழுதனர். குழந்தைகளின் கதறல் சத்தம் கேட்டு அருகிலிருந்த பொதுமக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.பின்னர் வேனின் கண்ணாடிகளை உடைத்து, உள்ளே சிக்கியிருந்த 15 குழந்தைகளையும் பாதுகாப்பாக வெளியே கொண்டு வந்தனர்.
பொதுமக்களின் விரைவான செயல்பாடு பெரிய அசம்பாவிதத்தை தவிர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து காயமடைந்த அனைத்து குழந்தைகளும் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
குழந்தைகள் அனைவரும் ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்த விபத்து குறித்து தகவலறிந்த காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர்.
ஓட்டுநரின் அலட்சியமா, அல்லது வாகனத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறா என்பதைக் கண்டறிய பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.காலை நேரத்தில் பள்ளி மாணவர்களை மையமாகக் கொண்டு நிகழ்ந்த இந்த விபத்து திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking accident Saram area Screaming children People rescued 15 students trapped inside van safely What happened