பெரும் இழப்பு!!! விஜய் ரூபானி குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல்...!- பிரதமர் மோடி - Seithipunal
Seithipunal


நேற்று மதியம் குஜராத் அகமதாபாத்திலிருந்து லண்டன் புறப்பட்ட 'AI-171 விமானம்', புறப்பட்ட சில நிமிடங்களில் அங்குள்ள மருத்துவக் கல்லூரி விடுதிக்கட்டிடத்தின் மீது மோதி வெடித்து சிதறியது. இந்த கோர விபத்தில் அந்த விமானத்தில் பயணித்த பயணிகள், விமானி, விமான பணியாளர்கள் என 241 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

மேலும், மருத்துவக்கல்லூரி விடுதி கட்டிடத்தில் மோதியதால், அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த விபத்தால் 7 மருத்துவ மாணவர்கள் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 50 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

மேலும், AI-171 விமான விபத்தில் காயமடைந்தவர்களை சந்திக்க பிரதமர் நரேந்திர மோடி, அகமதாபாத் சிவில் மருத்துவமனைக்கு வந்தார். இதில் விமான விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் பிரதமர் மோடி நலம் விசாரித்து ஆறுதல் தெரிவித்தார்.

இதையடுத்து, அகமதாபாத்தில் 'ஏர் இந்தியா' விமானம் விபத்துக்குள்ளான இடத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடி பார்வையிட்டார்.

இந்த நிலையில், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் 'விஜய் ரூபானி' குடும்பத்தினரை பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.இச்சம்பவம் நேற்றிலிருந்து நாட்டையே உலுக்கிக்கொண்டு இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Great loss Meet Vijay Rupanis family in person and offer condolences Prime Minister Modi


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->