தந்தையை தள்ளுவண்டியில் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்ற சிறுமி - ஒடிசாவில் நடந்த கொடூரம்.! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலத்தில் உள்ள பத்ரக் மாவட்டம் நாதிகான் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷம்புநாத். தள்ளுவண்டியை வைத்து பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு சுஜாதா சேத்தி என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் கடந்த மாதம் 22-ம் தேதி நிலத்தகராறு தொடர்பாக சிலர் ஷம்புநாத்தை தாக்கியுள்ளனர்.

இதனால், படுகாயமடைந்த அவரை, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல போதிய வசதிகள் இல்லாததால்,பதினான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அந்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லாததால் உடனடியாக அவரை பத்ரக் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

ஆனால், ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்ல பணம் மற்றும் செல்போனும் இல்லாததால் தவித்து போன சுஜாதா, தனது தந்தையைக் காப்பாற்ற சுமார் முப்பத்தைந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு தள்ளு வண்டியிலேயே அழைத்துச் செல்ல முடிவெடுத்தார்.

அங்கு, அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதால் அடுத்த வாரம் வருமாறு அறிவுறுத்தினர். இருப்பினும் மருத்துவமனையில் தங்குவதற்கான வாய்ப்பு இல்லாததால் மீண்டும் தனது சொந்த ஊருக்கு சுமார் ஐம்பது 0 கிலோ மீட்டர்கள் பயணிக்க வேண்டும் என்ற நிலையில் சுஜாதா கண்ணீருடன் கிளம்பினார்.

இது குறித்து தகவல் அறிந்த பத்ரக் எம்எல்ஏ சஞ்சிப் மல்லிக் மற்றும் தாம்நகர் முன்னாள் எம்எல்ஏ ராஜேந்திர தாஸ் ஆகியோர் உடனடியாக சிறுமிக்கு உதவ முன் வந்தனர். தந்தையைக் காப்பாற்ற தள்ளு வண்டியிலேயே சிறுமி அழைத்துச் சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

girl carries father in trolly at odisa


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->