உ.பியில் சோகம் - மண்சரிவில் சிக்கி 4 பெண்கள் பலி.! - Seithipunal
Seithipunal


உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள காஸ்கஞ்ச் மாவட்டத்தில் இன்று ஒரு பெரிய மண் மேடு சரிந்து விழுந்ததில் நான்கு பெண்கள் பரிதாயமாக உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர்.

காஸ்கஞ்ச் மாவட்டம் மோகன்புரா கிராமத்தில், வீடுகளுக்கு பூச்சுவேலை செய்ய திறந்தவெளியில் மண் அள்ளியபோது மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த மண்சரிவில் மொத்தம் 9 பெண்கள் சிக்கிக் கொண்டிருந்தனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அனைவரையும் மீட்டு மருத்துவரணைக்கு அனுப்பி வைத்தனர். 

அவர்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மற்றவர்கள் சிக்சிஹாய் பெற்று வருகின்றனர். இந்த நிலையில், இந்த விபத்து சம்பவத்திற்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு சென்று நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

அதன் படி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். மண் சரிவில் சிக்கி நான்கு பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

four womens died for landslide in uttar pradesh


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->