விமானத்தில் கலப்பட எரிபொருளால் விபத்து..? தேசிய விண்வெளி ஆய்வகத்தின் முன்னாள் துணை இயக்குநர் பகீர் தகவல்..! - Seithipunal
Seithipunal


குஜராத் மாநிலம் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்திலிருந்து லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்குப் 242 பேருடன் புறப்பட்ட ஏஐ-171 போயிங் ட்ரீம்லைனர் 787-8 ரக விமானம், புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமான நிலையத்தின் எல்லைக்கு வெளியே விழுந்து நொறுங்கியது. 

இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த  பேரில் 241 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர் தப்பியுள்ளார். அத்துடன் தரையில் மருத்துவ கல்லூரி விடுதியில் விமானம் விழுந்ததால் மருத்துவ மாணவர்கள் உள்பட 33 பேர் பலியாகியுள்ளனர். மொத்தம் 274 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், அகமதாபாத் விமான விபத்துக்கு கரணம் கலப்பட எரிபொருளை பயன்படுத்தி இருக்கலாம் என்று சென்னையை சேர்ந்த நிபுணர் ஒருவர் பகீர் தகவல் வெளியிட்டுள்ளார். அகமதாபாத் விமான விபத்தை தொடர்ந்து பல முன்னாள் கேப்டன்கள், நிபுணர்கள் நேர்காணல்களை அவர்களது யூகங்களையும் கூறிவருகின்றனர். இந்நிலையில், தேசிய விண்வெளி ஆய்வகத்தின் முன்னாள் துணை இயக்குநர் ஜே.முரளிதர், சென்னையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது: விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விமானக் கட்டுப்பாட்டு அறைக்கு ‘மேடே’ என அபாய அழைப்பு விடுத்துள்ளது. அதன் பிறகு விமானத்துடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டது. அகமதாபாத் விமான விபத்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது என்று தெரிவித்துள்ளார். 

அத்துடன், விமானத்தில் எரிபொருள் கலப்படம் போன்ற காரணங்களால் இதுபோன்ற கோர சம்பவங்கள் நிகழ வாய்ப்புள்ளது என்றும், பொதுவாக, விமான விபத்துகளின் காரணத்தைக் கண்டறிய, விமானத்தின் கருப்புப் பெட்டியான விமான தரவு ரெக்கார்டர் மற்றும் விமானிகளின் உரையாடலைப் பதிவு செய்யும் காக்பிட் குரல் ரெக்கார்டர் ஆகியவற்றைக் கண்டறிந்து ஆய்வு செய்வது முதல் படியாகும் என்று தெரிவித்த அவர், பறவை மோதுவதால் ஒரே நேரத்தில் விமானத்தின் இரண்டு இன்ஜின்களும் செயலிழக்க வாய்ப்பில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு பறவை மோதியிருந்தால் ஒரு இன்ஜின் மட்டுமே பாதிக்கப்பட்டிருக்கும். எனவே விமானத்தின் இரண்டு இன்ஜின்களும் ஒரே நேரத்தில் சக்தியை இழந்ததற்கு எரிபொருள் கலப்படம் முக்கிய காரணமாக இருக்கலாம் என்று சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறு எரிபொருள் பாதிக்கப்பட்டால், விமானத்தால் போதிய உயரத்திற்குச் செல்ல முடியாது. விபத்துக்குள்ளான விமானம் லண்டன் செல்வதற்காக 35 டன்னுக்கும் அதிகமான எரிபொருளைக் கொண்டிருந்தது என்றும் தெரிவித்துள்ளார். இதனால், விமானம் தரையில் விழுந்து நொறுங்கியதும் மிகப்பெரிய தீக்கோளமாக வெடித்துச் சிதறியதாகவும், இதனால்தான் இவ்வளவு பெரிய விபத்தை சந்திக்க நேரிட்டுள்ளது என்றும் ஜே.முரளிதர் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Former Deputy Director of the National Space Observatory says the accident may have been caused by adulterated fuel on the plane


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->