பெங்களூருவில் விமான சாகசம் - 10 நாட்களுக்கு விமான நேரம் மாற்றம்.! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூருவில் வருகிற 13-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை ஐந்து நாட்கள் சர்வதேச விமான கண்காட்சி நடைபெறுகிறது. இந்த விமான கண்காட்சி பெங்களூரு எலகங்கா விமான நிலையத்தில் நடைபெறுகிறது.

இதனால், பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு இயக்கப்படும் விமானங்களின் நேரம் மாற்றப்பட்டுள்ளன. 

இதுகுறித்து, பெங்களூரு விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது, "இன்று முதல் வருகிற 17-ந் தேதி வரை என்று மொத்தம் பத்து நாட்களுக்கு விமானங்கள் புறப்படும் நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. 

இன்று முதல் வருகிற 11-ந் தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரையும் விமானங்கள் இயக்கப்படாது.

அதேபோன்று 12 மற்றும் 13-ந் தேதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையும், 14 மற்றும் 15-ந் தேதிகளில் நண்பகல் 12 மணி முதல் மதியம் 2.30 மணி வரையும், 16-ந் தேதி மற்றும் 17-ந் தேதிகளில் காலை 9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரையும் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படாது" என்று தெரிவித்தார். 

இந்த நடவடிக்கை, சாகசத்தில் ஈடுபடும் விமானங்கள் அணிவகுத்து நிற்கவும், பயிற்சியில் ஈடுபடவும் வசதியாக இருக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

flight timing change in banglore for airshow


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->