பிரியாணிக்கு கூடுதலாக ரெய்தா கேட்டவர் அடித்துக்கொலை!
five peoples arrested for kill man in telunagana
பிரியாணிக்கு கூடுதலாக ரெய்தா கேட்டவர் அடித்துக்கொலை!
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் புஞ்சகுட்டா பகுதியில் உள்ள மெரிடியன் என்ற ஹோட்டலுக்கு தனது நண்பர்களுடன் மது போதையில் சென்ற முகம்மது லியாகத் சாப்பிடுவதற்கு பிரியாணி ஆர்டர் செய்துள்ளார்.
அப்போது ஹோட்டல் ஊழியர்களிடம் பிரியாணிக்குக் கூடுதல் ரெய்தா கேட்டுள்ளார். ஆனால் ஹோட்டல் ஊழியர்கள் ரெய்தா வழங்க மறுத்ததால் அவருக்கும் ஹோட்டல் ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்பினருக்கும் இடையே கைகலப்பாக மாறி தாக்கிக்கொண்டதில் லியாகத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தி ஹோட்டல் மேலாளர் உள்பட 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
மேலும் இந்த சம்பவத்தில் கொலையைத் தடுக்கத் தவறியதாக இரு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்துள்ளனர். பிரியாணிக்கு கூடுதலாக ரெய்தா கேட்ட நபர் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
English Summary
five peoples arrested for kill man in telunagana