ஆந்திரா : ஆண் குழந்தை இல்லாத ஆத்திரத்தில் மகளைக் கொன்ற தந்தை .! - Seithipunal
Seithipunal


ஆந்திரா : ஆண் குழந்தை இல்லாத ஆத்திரத்தில் மகளைக் கொன்ற தந்தை .!

ஆந்திர மாநிலத்தில் உள்ள விஜயவாடா மாவட்டம், மங்களகிரி பகுதியை சேர்ந்தவர்கள் கோபி-மவுனிகா. இந்த தம்பதியினருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆனால், கோபிக்கு ஆண் குழந்தை வேண்டும் என விரும்பிய நிலையில், அடுத்தடுத்து 2 பெண் குழந்தைகள் பிறந்ததால் அவர்கள் மீது வெறுப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் கோபி, கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது 2 வயது பெண் குழந்தையின் காலை பிடித்து சுவற்றில் அடித்துள்ளார். அதில் அந்த பெண் குழந்தை படுகாயமடைந்தது. இதைப்பார்த்த அவரது மனைவி மவுனிகா குழந்தையை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தார். இருப்பினும் சிறுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது. 

இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து கோபியை சிறையில் அடைத்தனர். இதற்கிடையே கோபியை ஜாமினில் எடுக்க அவரது உறவினர் சாய் சந்தீப் என்பவர் முயற்சி செய்து வந்தார். இதையறிந்த கோபியின் மாமனார் சத்திய நாராயணா மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் கோபியை ஜாமீனில் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

அப்போது, சாய் சந்தீப், சத்திய நாராயணாவை கல்லால் தாக்கியுள்ளார். இதில் சத்திய நாராயணா படுகாயம் அடைந்தார். இதைக் கண்டு ஆத்திரமடைந்த சத்திய நாராயணாவின் மகன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சாய் சந்தீப்பின் கழுத்தை அறுத்துள்ளார். 

இதனால், சாய் சந்தீப் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பின்னர் வெங்கட கிருஷ்ணா மங்களகிரி போலீசில் சரணடைந்தார். இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவம் வழக்கு பதிவு செய்து வெங்கடகிருஷ்ணாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father kill daughter in andira


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->