அதிர்ச்சி - உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதி சடங்கு செய்த தந்தை - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அதிர்ச்சி - உயிருடன் இருக்கும் மகளுக்கு இறுதி சடங்கு செய்த தந்தை - நடந்தது என்ன?

தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் பகுதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மகள் நந்தினி. இவர் ஒரு இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்த காதல் விவகாரம் குமாருக்குத் தெரிய வந்துள்ளது. 

உடனே அவர், அவசர, அவசரமாக மகளின் காதலை பிரித்து, வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைத்தார். ஆனால், அந்த நபர் எலும்பு புற்று நோய் ஏற்பட்டு இறந்துவிட்டார். இந்த நிலையில், நந்தினி தன் காதலரை மணந்துகொண்டுள்ளார்.

இந்தச் செயலால் ஆத்திரமடைந்த தந்தை குமார், தனது மகள் நந்தினி இறந்துவிட்டார் என்பது போல கண்ணீர் அஞ்சலி போஸ்டர் அடித்து ஊரில் ஒட்டியுள்ளார். 

அத்துடன் அவர் உயிருடன் இருக்கும் தனது மகளுக்கு இறுதிச் சடங்கு செய்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

father funeral to daughter in telungana


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->