மகனுக்கு தீவைத்த தந்தை... பணதகராற்றால் நடந்த கொடூரம்..!
Father Attempt Killed His SOn
பணதகராறு காரணமாக மகனை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு நகரில் சாம்ராஜ்பேட் பகுதியில் வசித்து வருபவர் சுரேந்திர குமார். அவருக்கு மகன் அர்பித் என்ற மகன் இருக்கிறார். அர்பித் தனது தந்தையின் உலோகம் சார்ந்த தொழிலை நிர்வாகித்து வத்து வந்தார்.
இந்த தொழிலுக்காக சுமர ஒரு கோடி வரை மகனுக்கு சுரேந்திர குமார் தந்துள்ளார். இந்த பணம் குறித்த கணக்குகளை தனக்கு தரும்படி பல முறை கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர் பதிலளிக்கவில்லை என கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த சுரேந்திர குமார் மகன் மீது பெயின்ட் தின்னர் ரசாயனத்தை ஊற்றி அதன் பிறகு தீ வைத்தார். தீப்பற்றிய அலறி அடித்து கொண்டு ஓடிய அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த காட்சிகள் இணையதளத்தில் வைரலான நிலையில் சுரேந்திர குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Father Attempt Killed His SOn