பெற்ற மகளை சீரழித்து கர்ப்பமாக்கிய கேவலமான தந்தை கைது: கேரளாவில் பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்..!
Father arrested for raping daughter in Kerala and impregnating her
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில்ஹோஸ்துர்க் என்ற கிராமம் உள்ளது. இது கர்நாடக மாநிலத்தை ஒட்டியுள்ள பகுதியாகும். இங்கு கர்நாடக மாநிலம் குடகு பகுதியை சேர்ந்த 45 வயதான ஒருவர் தன்னுடைய குடும்பத்துடன் வசித்து வருகின்ற நிலையில், அவருக்கு 08-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயதான ஒரு மகள் இருக்கிறாள்.
மாணவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட்டுள்ளதையடுத்து அவரை, மங்களூருவில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர். அப்போது, மாணவியை பரிசோதித்து பார்த்த மருத்துவர், மாணவி 04 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மருத்துவமனை நிர்வாகிகள் உடனே ஹோஸ்துர்க் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, மாணவியிடம் போலீசார் விசாரணை நடத்தியத்தில், தனது தந்தை தான் தன்னை பலாத்காரம் செய்ததாக மாணவி கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

புகாரை தொடர்ந்து, மாணவியின் தந்தை மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து அறிந்ததும் அவர் தலைமறைவாகிய நிலையில், அவரை போலீசார் தேடிவந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டுக்கு வந்த மாணவியின் தந்தையை அந்த பகுதியினர் பிடித்து போலீசிடம் ஒப்படைத்துள்ளனர்.
போலீசாரின் விசாரணையில், அவர் வெளிநாட்டுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டிருந்ததும், பாஸ்போர்ட் எடுப்பதற்காகவே வீட்டுக்கு வந்ததும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் அவரை கைது செய்து ஹோஸ்துர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.
இதற்கிடையே சிறுமியை பலாத்காரம் செய்தது அவர் தானா..? என்பதை கண்டுபிடிப்பதற்காக டிஎன்ஏ பரிசோதனை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதேபோன்று கடந்த சில தினங்களுக்கு முன்பும் இதே ஹோஸ்துர்க் பகுதியில் ஒருவர் சொந்த மகளை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Father arrested for raping daughter in Kerala and impregnating her