நாடு முழுவதும் நள்ளிரவு முதல் அமல்.! தவறினால் இரு மடங்கு கட்டணம்.!
Fastag must today
சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக மின்னணு அட்டை முறையை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி, வாகன உரிமையாளர்கள் தங்களின் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி ஃபாஸ்டேக் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம்.
இந்த அட்டை மூலம் சுங்கச்சாவடிகளை வாகனங்கள் கடக்கும்போது, கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட நேரம் நிற்காமல் ஃபாஸ்டேக் அட்டை மூலம் பணம் வசூலிக்கப்பட்டு வாகனங்கள் விரைவாக செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்துவதற்கான அவகாசம் நேற்றுடன் முடிந்தது. இன்று முதல் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் முறையில் கட்டணம் செலுத்துவது கட்டாயமாக்கப்படுகிறது.
இனி மேல் ஃபாஸ்டேக் இல்லாமல் சுங்கச்சாவடிகளை கடக்க வேண்டும் என்றால் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.