நான்காவது முறை கெஜ்ரிவாலுக்கு சம்மன் - அதிரடி காட்டும் அமலாக்கத்துறை.! - Seithipunal
Seithipunal


நாட்டின் தலைநகரான டெல்லி அரசு மதுபான கொள்கையை அமல்படுத்தியதில் முறைகேடு நடைபெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த முறைகேட்டில் சட்ட விரோத பணபரிமாற்றமும் நடைபெற்று இருப்பதாக அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்துள்ளது. 

இந்த வழக்கில் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளதையடுத்து, முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த கடந்த நவம்பர் 2, டிசம்பர் 21 ஆகிய தேதிகளில் ஆஜராகுமாறு அவருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி இருந்தது. 

ஆனால் அவர் ஆஜராகவில்லை. இருப்பினும் முன்றாவது முறையாக கடந்த 3-ந் தேதி சம்மன் அனுப்பியிருந்தது. அதற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகாமல், மாநிலங்களவை தேர்தல், குடியரசு தின விழா ஏற்பாடுகள் உள்ளிட்ட காரணங்களை காட்டியுள்ளார்.

இந்த நிலையில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நான்காவது முறையாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அந்த சம்மனில், வரும் 18 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதுவரைக்கும் அமலாக்கத்துறை அனுப்பிய மூன்று சம்மன்களையும் புறக்கணித்த கெஜ்ரிவால் இந்த முறை விசாரணைக்க்கு ஆஜராவாரா? அல்லது இந்த முறையும் புறக்கணிப்பாரா? என்ற பரபரப்பு டெல்லி அரசியல் வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Enforcement Department fourth time summan send to kejriwal


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->