#ஜம்மு காஷ்மீர் || பாதுகாப்பு படையினர் மற்றும் பயங்கரவாதிகள் இடையே மோதல்.!
Encounter between security forces and terrorists in Jammu Kashmir
ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலையடுத்து பாதுகாப்பு படையினர் இன்று காலை காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அனந்த்நாக் மாவட்டம் அண்ட்வென் சஹம் பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்பொழுது அப்பகுதியில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து காவல்துறையினர், இரு தரப்பிலும் இதுவரை எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை என்றும், தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே சண்டை நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளனர்.
English Summary
Encounter between security forces and terrorists in Jammu Kashmir