மஹாராஷ்டிராவில் சோகம் - யானை துரத்தியதை வீடியோ எடுத்த ஓட்டுநர் - நொடியில் நடந்த விபரீதம்.! - Seithipunal
Seithipunal


மஹாராஷ்டிராவில் சோகம் - யானை துரத்தியதை வீடியோ எடுத்த ஓட்டுநர் - நொடியில் நடந்த விபரீதம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கட்சிரோலி அருகே பலஸ்கான் என்ற வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாகவும், இந்த யானைகள் விவசாய பயிர்களை சேதப்படுத்தி, தங்களை அச்சுறுத்துவதாகவும் அப்பகுதி மக்கள் வனத்துறையில் புகார் தெரிவித்தனர்.

இந்த புகாரை அடுத்து யானை நடமாட்டம் உள்ள பகுதிக்கு வனத்துறையினர் சென்றுள்ளனர். அப்போது, அவர்களை யானை துரத்த ஆரம்பித்துள்ளது. இதனால் அச்சம் அடைந்த வனத்துறையினர் காட்டுக்குள் ஓடினர்.

இதனை வனத்துறை அதிகாரிகளை அழைத்து வந்த ஓட்டுநர் சுதாகர் பி அத்ரம் என்பவர், வீடியோ எடுத்துக் கொண்டிருந்தார். ஆனால் அவரையும் அந்த யானை துரத்த தொடங்கியது. இந்த பயத்தில் சுதாகர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது யானை அவரை மிதித்துக் கொன்றது.

அதன் பின்னர் யானை அங்கிருந்துச் சென்றது. உடனே அதிகாரிகள் ஓடி வந்து ஓட்டுநர் சுதாகரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானை துரத்தியதை வீடியோ எடுத்த ஓட்டுநரை யானை மிதித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

elephant kill forest department employee in maharastra


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->