உத்தரகாண்ட் : பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து - 8 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


உத்தரகாண்ட் : பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து - 8 பேர் பலி.!

உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி மாவட்டத்தில் கங்கோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 

இந்த பேருந்து கங்னானி என்ற பகுதியருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. சுமார் 50 மீட்டர் ஆழத்தில் பேருந்து விழுந்ததில் பயணிகள் இடிபாடுக்குள் சிக்கி கொண்டனர். 

இந்த விபத்தில் 8 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 27 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் சம்பவம் குறித்து போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர். 

அதன் படி அவர்கள் மீட்புப் படையினருடன் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் உயிரிழந்தவர்களின் உடல்களையும் மீட்டு சிகிச்சைக்காக மருத்துத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

eight peoples died for bus accident in uttarkhant


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->