ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்.! - Seithipunal
Seithipunal


ஜம்மு காஷ்மீரில் திடீர் நிலநடுக்கம்.!

இந்தியாவின் எல்லையான ஜம்மு காஷ்மீரில் கிஷ்ட்வார் பகுதியில் நேற்றிரவு பதினொரு மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 ஆக பதிவாகி இருந்தது என்று தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது. 

5 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருளிழப்புகள் குறித்த விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இரவு நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கதால் பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு தெருவுக்கு ஓடி வந்தனர்.

இதற்கு முன்னதாக, நேபாளத்தில் நேற்று காலை 7.24 மணிக்கு 5.3 ரிக்டர் அளவிலும், நேற்று மாலை 5.18 மணியளவில் 4.3 ரிக்டர் அளவில் மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டது. 

இதனால், மக்கள் தங்களின் பாதுகாப்புக்காக குடியிருப்பு பகுதிகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து வேறு இடங்களுக்கு தப்பியோடினர். இந்த நிலா நடுக்கத்தில், சில வீடுகள் முழுவதுமாக அல்லது பகுதியாக இடிந்து விழுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

earthquake in jammu kashmeer


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->