ரேப் பண்ண வந்தா தடுக்காதீங்க.! ஆணுறைகள் எடுத்துட்டு போங்க - பிரபல டைரக்டர் குரூரம்.!
director says about rape
ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரியங்கா ரெட்டியை சில நாட்களுக்கு முன் மதுபோதையிலிருந்த சென்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன் பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். இந்த சம்பவத்திற்குப் பலரும் தங்கள் கண்டன குரல்களை பதிவு செய்து வந்தனர். இந்நிலையில் இதுகுறித்து தெலுங்கு இயக்குநர் டேனியல் ஷிரவன் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், "பாலியல் பலாத்காரங்கள் ஆண்களின் மற்றும் பெண்களின் திருப்தியற்ற பாலியல் ஆசைகளால் மட்டும் தான் ஏற்படுகிறது.
எனவே, பெண்கள் தங்களை கற்பழிக்கவரும் ஆண்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் ஏன் கொலைசெய்யப்போகிறார்கள்.?தண்டனைக்கு பயந்து தான் கொலை செய்கிறார்கள். எனவே, பெண்கள் 100 எண்ணுக்கு போன் செய்வதற்கு பதில் ஆணுறைகள் மற்றும் கருத்தடை சாதனங்களை எடுத்துச் செல்லுங்கள்’ பிடிவாதமாக இருந்தால் கற்பழிப்பு தவிர வேறு வழியில்லை." என்று கூறி இருந்தார்.
இந்த குரூரமான கருத்திற்கு, திரைப்படங்களின் மூலம் நல்ல கருத்துக்களை சமூகத்திற்கு கொடுக்க வேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒரு இயக்குநர் இவ்வளவு கீழ்த்தரமான சிந்தனையை கொண்டிருக்கலாமா? என்று பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து இயக்குனரின் தாய் மன்னிப்பு கேட்டு இருக்கின்றார்.